வியாழன், 5 நவம்பர், 2009
ஐ.ரவிக்குமார் -ISCA இளைய விஞ்சானி
தம்பி ஐ. ரவிக்குமார் ஸ்ரீ பரமகல்யானி கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை வேதியல் பட்டங்கள் பயின்றவர் .அதன் பிறகு சிலகாலம் வேதியல் சார்ந்த கம்பெனிகளில் பணி புரிந்து விட்டு CSMCRI(CSIR)இல் தனது வேதியல் ஆராய்ச்சியை தொடர்ந்தார் .தற்ப்போது இவர் IACS நிறுவனத்தில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் .தனது ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியதற்காக ISCA அமைப்பு இவருக்கு இளம் விஞ்சானி விருது(2009-2010) வழங்கி சிறப்பித்துள்ளது .இந்த சாதனைக்காக நண்பர்கள் சார்பில் ரவியை மிகவும் பாராட்டுவதோடு மட்டுமின்றி உலக அரங்கில் இன்னும் சிறப்பாக சமுதாயத்திற்கு பயனுள்ள பல அறிவியல் தொழில்நுட்பங்களை உருவாக்கிட மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம் ...... I.Ravikumar Received ISCA(2009-2010) young scientist Award http://sciencecongress.nic.in/html/listscientist.html
செவ்வாய், 13 அக்டோபர், 2009
ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி மாணவர்கள் முருகன்,விஜய் சாதனை
சுரண்டையை சேர்ந்த முருகன், நெல்லையை சேர்ந்த விஜய் ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி வேதி துறையின் முன்னாள் மாணவர்கள். முருகன் குஜராத்தில் உள்ள மத்திய கடல்வேதிபொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவராக உள்ளார் .விஜய் மும்பையில் ஒரு தனியார் கம்பனியில் வேதியலாளராக உள்ளார். இவர்கள் நடந்து முடிந்த CSIR தேசிய தகுதி தேர்வில் விரிவுரையாளராக தேர்வு பெற்றுள்ளார்கள்.வாழ்த்துக்கள்
http://munnerru.blogspot.com/2009/10/blog-post_8341.html
..............
http://munnerru.blogspot.com/2009/10/blog-post_8341.html
ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி-ஆழ்வார்குறிச்சி
ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி-ஆழ்வார்குறிச்சி
ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி ,தென்தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் பாபநாசம் போன்ற சிறப்பான மலைப்பகுதிகளுக்கிடையில் கடனாநதி பாயும் இயற்கை சுழலில் ஆழ்வார்குறிச்சி எனும் கிராமத்தில் திரு. அனந்த ராமகிருஷ்ணன் அவர்களால் நிறுவப்பட்டு கிராம, ஏழை எளிய மற்றும் நகர்ப்புற மாணவர்களின் வாழ்கை முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிவரும், இருபாலர் பயிலும் அரசு உதவி பெரும் சிறந்த கல்லூரி ஆகும்.இங்கு அறிவியல் , கலை மற்றும் தொழில் நுட்ப படிப்புகளும் சிறப்பாக கற்றுதரப்படுகின்றன.
வேதியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல்,வணிகவியல், உயிர் தொழில்நுட்பவியல், கணினி தொழில்நுட்பவியல் போன்ற துறைகள் உள்ளன.
மாணவர்களின் பல்திறனை வளர்க்கும் வகையில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், யூத் ரெட் கிராஸ் , நூலகம், விளையாட்டு என பல அமைப்புகள் இங்கு சிறப்பாக செயல் படுகின்றன.
இந்த கல்லூரி எந்த மாணவனிடமும் தவறாக பீஸ் என்ற பெயரில் பணம் பறிப்பதில்லை. பல ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி அவர்களின் படிப்பை தொடர வழிசெய்கிறது.
இங்கு பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் சிறந்தவர்கள்.
இங்கு படித்த பல மாணவர்கள் இன்று உலகெங்கிலும் சிறந்த நிலையில் இருக்கிறார்கள்.
இங்கு செயல் படும் முன்னாள் மாணவர் அமைப்பு இன்றைய மாணவர்களுக்கு பலவிதத்தில் உதவி செய்து வருகிறது.
தற்போது கல்லூரி முதல்வராக முனைவர் திரு சுந்தரம் அவர்களும், கல்லூரி செயலராக முனைவர் திரு தேவராஜன் அவர்களும் செயல்பட்டு வருகின்றனர்
இங்குள்ள பெரும்பாலான துறைகள் ஆராய்ச்சி நிலையங்களாகவும் செயல்படுகின்றன .எதிர்காலத்தில் ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி உலக அரங்கில் சிறந்த கல்வி நிறுவனமாக வளரும் ........
http://munnerru.blogspot.com/2009/10/blog-post_8988.html
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
